கம்பன் விழாக் கவியரங்குகளில் முடிசூடா மன்னராக கவிக்கோலோச்சி புகழ்நாட்டியவர் வீறுகவியரசர் முடியரசன். கம்பன் விழாவில் வணக்கம் சொல்லும் முறையை தம் மாணவப்புரட்சியாளர்கள் வழி நடைமுறைக்கு வர வைத்தவர். திராவிட இயக்கச் சிந்தனைகளை கம்பநேயர்களிடமும் திராவிட இயக்கத்தவரிடம் கம்பனின் தமிழ்ச்சுவையையும் கொண்டு சேர்த்தவர். அவரது கம்பன் விழாக் கவியரங்கக் கவிதைகளின் வழி கவிச்சக்கரவர்த்தி கம்பனை கன்னித்தமிழ்க்காதலன், வள்ளுவநெறிவழுவா வேந்தன், பாகுபாடு ஒழித்த பகுத்தறிவாளன், பொதுவுடைமைப்புரட்சியாளன் ஆகிய பரிமாணங்களில் காட்டுகிறது இக்கட்டுரை.