'கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்' என்று தந்தைபெரியார் அவர்களும் 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று பேரறிஞர் அண்ணா அவர்களும் 'என் மூத்த வழித்தோன்றல்..எனக்குப் பிறகு கவிஞன்' என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் போற்றிப் புகழ்ந்த பெருமைக்குரியவர் வீறுகவியரசர் முடியரசன் ஆவார். அவருடைய படைப்புகளை ஆய்வுக்களமாகக்கொண்டு தமிழ்ச்சான்றோர்பெருமக்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.